For Daily Alerts
Just In
மூடப் பழக்கத்தால் சேதுவை முடக்குகின்றனர்-நல்லக்கண்ணு
தூத்துக்குடி: ராமர் பாலம் என்று சொல்லி சேது சமுத்திர திட்டத்தை தடுதது வருகின்றனர். மூடப் பழக்க வழக்கங்கள் அறிவியல் வளர்ச்சிக்கு தடையாக இருக்க கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பெரியவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பேராசிரியர் மணிமாறன், ரேணுகா ஆகியோர் எழுதிய நூல்கள் வெளியிட்டு விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு,
தமிழர்களுக்கு நல்லது பயக்கும் சேது சமுத்திர திட்டப் பணிகளை ராமர் பாலம் என்று சொல்லி தடுத்து வருகின்றனர். மூடப் பழக்க வழக்கங்கள், அறிவியல் வளர்ச்சிக்கு தடையாக இருக்ககூடாது என்றார்.
Story first published: Wednesday, February 13, 2008, 13:20 [IST]