காலம் நம் கதவுகளை தட்டும் சூழல் வரும்-வைகோ
சென்னை:யாரும் அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. மாற்றங்கள் வரும். காலம் நம் கதவுகளை தட்டும் சூழ்நிலை உருவாகும் என மதிமுகவினரிடையே அக் கட்சியின் ெபாதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மறைந்த கவிஞர் குடியரசுவின் நினைவு தினம் மதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மதிமுக சார்பில் கவிஞர் குடியரசுவின் வாரிசுகளுக்கு 8 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் ரூ.5 லட்சத்தை கவிஞர் குடியரசு மகன் இசைவாணனிடம் வைகோ வழங்கினார்.
அப்போது வைகோ பேசுகையில், கடந்த 14 ஆண்டுகளாக நாம் தோல்விகளால் தோய்ந்து போனாலும் கூர் தீட்டப்பட்டிருக்கிறோம். யாரும் அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. மாற்றங்கள் வரும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலே ஒரு நீக்ரோ இளைஞன் போட்டியிடக்கூடிய அளவுக்கு மாறியிருக்கிறது. நம்மால் முடியும்.
காலம் நம் கதவுகளை தட்டும் சூழ்நிலை உருவாகும். சிங்கம் எப்போதும் சிலிர்த்து எழாது. எப்போது புறப்பட வேண்டுமோ அப்போது புறப்படுவோம் என்றார்.