மார்ச் 8ல் மலேசியாவில் தேர்தல்
புத்ரஜெயா: மலேசிய நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைகளுக்கு மார்ச் 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு வசதியாக நேற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
மலேசிய நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் அப்துல்லா அகமது படாவி வெளியிட்டார். இந்த நிலையில், தேர்தல் தேதியை இன்று மலேசிய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
இதுகுறித்து மலேசிய தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷீத் அப்துல் ரஹ்மான் கூறுகையில், 222 நாடாளுமன்றத் தொகுதிகள், 12 மாநிலங்களைச் சேர்ந்த 505 மாகாண தொகுதிகளுக்கு மார்ச் 8ம் தேதி தேர்தல் நடைபெறும். சராவக் மாகாணத்திற்கு 2006ம் ஆண்டு தேர்தல் நடந்து விட்டதால் அங்கு மட்டும் தேர்தல் நடைபெறாது.
ேவட்பு மனு தாக்கல் பிப்ரவரி 24ம் தேதி தொடங்கும். இத்தேர்தலில் 1 கோடியே 9 லட்சத்து 22 ஆயிரத்து 139 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றார் அவர்.