For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'கிட்னி' அமீத்குமார் தப்ப உதவிய எஸ்.ஐ. கைது!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: குர்கான் சிறுநீரக மோசடி குற்றவாளி டாக்டர் அமீத்குமார் நேபாளத்திற்கு தப்ப உதவிய, குர்கான் உதவி சப் இன்ஸ்பெக்டர் இன்று கைது செய்யப்பட்டார். மேலும் 6 போலீஸாருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய குர்கான் சிறுநீரக மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் டாக்டர் அமீத்குமார், சமீபத்தில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார். டாக்டர் உபேந்திரா உள்ளிட்ட பலரும் இந்த வழக்கில் கைதாகியுள்ளனர்.

அமீத் குமார் நாட்டை விட்டுத் தப்ப 7 போலீஸார் உதவியது தெரிய வந்துள்ளது. இதில் இந்த வழக்கை தற்போது விசாரித்துக் கொண்டிருக்கும் போலீஸ் குழுவில் இடம் பெற்றுள்ள உதவி சப் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் குமார் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 6 போலீஸாருக்கு வலை வீசப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

டாக்டர் அமீத்குமார், நேபாளம் தப்ப ரவீந்தர் சிங் தலைமையில் இந்தப் போலீஸ் குழுவினர் உதவியுள்ளனர். இதற்காக அமீத்குமாரிடமிருந்து ரூ. 20 லட்சம் பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளனர்.

சிறுநீரக மோசடி குறித்து முன்பே குர்கான் போலீஸுக்குத் தெரியுமாம். அமீத்குமாரை கைதும் செய்துள்ளனர். ஆனால் அவரிடமிருந்து பெரும் பணம் லஞ்சமாக கிடைத்ததால் அவரைத் தப்பிக்க விட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X