தமிழக நகர்களில் பெட்ரோல் விலை-பெங்களூரில் அநியாயம்
சென்னை: மத்திய அரசு அறிவித்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துவிட்டது.
புதிய விகிதப்படி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவர விவரம்:
சென்னை:
பெட்ரோல்-புதிய விலை ரூ. 49.61 (பழைய விலை ரூ. 47.44)
டீசல்- புதிய விலை ரூ. 34.40 (பழைய விலை ரூ. 33.30)
மதுரை:
பெட்ரோல்- ரூ. 49.82 (ரூ. 47.62)
டீசல்- ரூ. 34.95 (ரூ. 33.80)
கோவை:
பெட்ரோல்- ரூ. 49.58 (ரூ. 47.38)
டீசல்- ரூ. 34.84 (ரூ. 33.55)
திருச்சி:
பெட்ரோல்- ரூ. 49.72 (ரூ. 47.53)
டீசல்- ரூ. 34.84 (ரூ. 33.72)
சேலம்:
பெட்ரோல்- ரூ. 49.76 (ரூ. 47.55)
டீசல்- ரூ. 34.88 (ரூ. 33.73)
புதுச்சேரி:
பெட்ரோல்- ரூ. 43.63 (ரூ. 41.70)
டீசல்- ரூ. 32.63 (ரூ. 31.59)
பெங்களூர் அநியாயம்:
இந்தியாவிலேயே பெட்ரோல் விலை மிக அதிகமாக இருப்பது பெங்களூரில் தான். அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை லிட்டர் ரூ. 52.86 (பழைய விலை ரூ. 50.58) ஆகும்.
போராட்டங்கள் :
இந்த விலை உயர்வை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப் போவதாக பாஜகவும் இடதுசாரிகளும் அறிவித்துள்ளன.
விலை உயர்வுக்கு பதிலாக பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை குறைக்கலாம் என்று இடதுசாரிக் கட்சிகள் யோசனை தெரிவித்துள்ளன.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தை மிகக் கடுமையானது.
இந்த விலையேற்றத்தை அரசு திரும்ப பெற வேண்டும். இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து, சாமான்ய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
அரசின் முடிவை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப அரசின் வரி வருமானமும் உயரும். எனவே இதை எண்ணெய் நிறுவனங்களோடு பகிர்ந்து கொண்டால் விலை ஏற்றத்திற்கே அவசியமில்லை என்றார் எச்சூரி.
இதேபோல தமிழகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதே போல பாஜகவும் தேசிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால், ஆட்சியில் இருந்தபோது பாஜகவும் வருடந் தவறாமல் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியது நினைவுகூறத்தக்கது.