மான்ஸா தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்த இந்திய தூதர்கள்
{image-tanzania-tamil (1)250_16022008.jpg tamil.oneindia.com}மான்ஸா (தான்சானியா): தான்சானியா நாட்டிற்கான இந்தியத் தூதர் கே.வி.பகீரத் அந்நாட்டின் மான்ஸா நகர தமிழ்ச் சங்கத்திற்கு தனது குடும்பத்துடன் வருகை தந்தார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவி்ற்கான இந்தியத் தூதர் கே.வி.பகீரத் இரண்டு நாள் பயணமாக மான்ஸா வந்தார்.
அவரது மனைவியும், மடகாஸ்கர் நாட்டிற்கான இந்தியத் தூதருமான ஹேமலதா பகீரத்தும், அவர்களது குழந்தைகளும் உடன் வந்தார். (ஹேமலதா, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)
அவர்களுக்கு மான்ஸா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரும் மான்ஸா தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மிக ஆர்வமாகக் கேட்டறிந்தனர்.
சங்கத் தலைவர் முகம்மத் ஹோஸ்மின் தமிழ்ச் சங்க உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். சித்ரா ராஜன் தலைமையில் அளிக்கப்பட்ட விருந்திலும் கலந்து கொண்ட தூதர் தம்பதி, தமிழ்க் குடும்பத்தினருடன் மிக மகிழ்ச்சியுடன் உரையாடினர்.
மான்ஸா வாழ் இந்தியர்களுக்கு தரமான மருத்துவம், கல்வி வசதிகள் இல்லாத நிலையை சங்க உறுப்பினர்களான செல்வராஜ், ஷெரீன் ஆயிஷா லியாகத் ஆகியோர் சுட்டிக் காட்டினர்.
தமிழ்ச் சங்க உறுப்பினரான ராஜேஷ் திருமுகத்தின் பாஸ்போர்ட் புதுப்பித்தலில் உள்ள பிரச்சனையை தீர்க்க உதவியாளருக்கு பகீரத் உத்தரவிட்டார். தூதர் தம்பதிகளின் குழந்தைகளுக்கு ஜி.எம்.ராஜன் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
மான்ஸா நகர தமிழ்ச் சங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.