For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய கொடி கேக்: சச்சின் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

இந்தூர்: மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது தேசியக் கொடி வடிவிலான கேக்கை வெட்டி, தேசியக் கொடியை அவமதித்ததாக கூறி சச்சின் டெண்டுல்கர் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

இதுதொடர்பாக இந்தூரைச் சேர்ந்த ராஜேஷ் பித்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில், தேசியக் கொடியின் நிறத்திலான கேக்கை சச்சின் டெண்டுல்கர் வெட்டியுள்ளார். இதன் மூலம் தேசியக் கொடியை அவர் அவமதித்து விட்டார் என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஷமீம், இந்த நிகழ்ச்சி வெளிநாட்டில் நடந்துள்ளது. மத்திய அரசுக்கும், இந்த சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை. மேலும் இந்த சம்பவத்திற்கான ஆதாரங்களும் சரிவர சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி சச்சின் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X