For Daily Alerts
Just In
'ஊஹா'வின் இலவச இன்டர்நெட்
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஊஹா சர்வீஸஸ் இந்தியா நிறுவனம், இலவச இன்டர்நெட் கியாஸ்க்குகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாமஸ் ஜான் கூறுகையில், சென்னையில் அடுத்த ஆறு மாதங்களில் 100 இலவச இன்டர்நெட் கிகயாஸ்க்குகள் அமைக்கப்படும். அதன் பின்னர் மும்பை, பெங்ளூர் ஆகிய பெருநகரங்களுக்கும், புனே, கொச்சி, ஹைதராபாத் போன்ற 2ம் நிலை நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இந்தியாவில் இன்டர்நெட் சேவை இன்று மிகவும் அத்தியாவசியமானதாகி விட்டது. இன்டர்நெட் இல்லாமல் யாரும் வாழ முடியாது என்ற நிலை உருவாகி விட்டது.
எனவே இன்டர்நெட்டை அனைவரும் எளிய முறையில், சுலபமாக பயன்படுத்திக் கொள்ளும் முகமாகவே இந்த இலவச இன்டர்நெட் கியாஸ்க் திட்டத்தை அமல்படுத்துகிறோம் என்றார் அவர்.
Comments
Story first published: Wednesday, February 20, 2008, 12:09 [IST]