For Daily Alerts
Just In
பாலைக்குழி சண்டையில் 11 ராணுவத்தினர் பலி - புலிகள்
மன்னார்: மன்னார் மாவட்டம் பாலைக்குழி பகுதியில், நடந்த கடும் சண்டையில் 11 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மன்னார் மாவட்ட விடுதலைப் புலிகள் இயக்க நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ள தகவலில் ஞாயிற்றுக்கிழமை பாலைக்குழியில் நடந்த 5 மணி நேர சண்டையில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 23 பேர் படுகாயமடைந்தனர்.
கடும் சண்டைக்குப் பின்னர் ராணுவம் அப்பகுதியிலிருந்து பின் வாங்கி விட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 5 மணிக்கு ஆரம்பித்த இந்த சண்டை 10 மணிக்கு முடிவடைந்ததாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Monday, February 25, 2008, 14:34 [IST]