For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலைக்குழி சண்டையில் 11 ராணுவத்தினர் பலி - புலிகள்

By Staff
Google Oneindia Tamil News

மன்னார்: மன்னார் மாவட்டம் பாலைக்குழி பகுதியில், நடந்த கடும் சண்டையில் 11 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மன்னார் மாவட்ட விடுதலைப் புலிகள் இயக்க நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ள தகவலில் ஞாயிற்றுக்கிழமை பாலைக்குழியில் நடந்த 5 மணி நேர சண்டையில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 23 பேர் படுகாயமடைந்தனர்.

கடும் சண்டைக்குப் பின்னர் ராணுவம் அப்பகுதியிலிருந்து பின் வாங்கி விட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 5 மணிக்கு ஆரம்பித்த இந்த சண்டை 10 மணிக்கு முடிவடைந்ததாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X