For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சே அலுவலகத்திற்குள் புக முயன்ற இரு தமிழர்கள்!

By Staff
Google Oneindia Tamil News

Rajapakse
கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் ராஜபக்சேவின் மாளிகைக்குள் தமிழ் காவல்துறை அதிகாரியின் உதவியுடன் ஊடுறுவிய தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த காவல்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டார்.

இருவரும் கொள்ளுப்பிட்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

தமிழரான அந்தக் காவல்துறை அதிகாரி ஒருவரை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த இளைஞர் ராஜபக்சே மாளிகைக்குள் நுழைந்தார். அங்கு நோட்டமிட்டுள்ளார். அவர் எதற்காக ஊடுறுவினார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் நோக்கத்தோடு அந்த இளைஞர் ஊடுறுவினாரா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X