For Daily Alerts
Just In
பழனி கோவில் யானைப்பாதையில் திடீர் தீ விபத்து !
பழனி: பழனி மலை கோவில் யானைப்பாதையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பழனி மலைக்குச் செல்ல படிக்கட்டுகள், விஞ்ச் ஆகியவை உள்ளன. இது தவிர யானை செல்லும் பாதையும் உண்டு.
பெரும்பாலும் படிகளில் ஏற முடியாத வயதானவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பாதையை பயன்படுத்துவர்.
இந்த பாதையில் பக்தர்கள் வீசும் குப்பை மலை போல் குவிந்துள்ளது. நேற்று அந்த குப்பையில் திடீரென தீப் பிடித்தது.
இதைக் கண்டு அலறிய பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள், அருகில் கடை வைத்துள்ளவர்கள் என பலரும் இணைந்து தீயை உடனடியாக அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்தப் பாதையில் குப்பைகளை உடனே அகற்றினால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை குறைக்க முடியும்.
Comments
Story first published: Monday, February 25, 2008, 12:50 [IST]