For Daily Alerts
Just In
தொழிலாளர்கள் தங்கியிருந்த 150 குடிசைகள் தீயில் சேதம்
அரியலூர்: அரியலூரில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்க அமைக்கப்பட்டிருந்த 150 தற்காலிக குடிசைகள் தீயில் கருகி சாம்பலாயின. அதிர்ஷ்டவசமாக யாரும் இதில் காயமடையவில்லை.
அரியலூரில் சிமென்ட் ஆலை கட்டுமானப் பணி ஒன்று நடந்து வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்குவதற்காக 200க்கும் மேற்பட்ட தற்காலிக குடிசைகள் போடப்பட்டிருந்தன. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு தங்கியிருக்கின்றனர்.
இங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில் 150 குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் என ரூ. 5 லட்சம் அளவிலான பொருட்கள் சேதமடைந்து விட்டன.
Comments
Story first published: Saturday, March 1, 2008, 11:52 [IST]