For Daily Alerts
Just In
சரத் கட்சிக்கு பேச்சாளர்கள் தேர்வு!!
சென்னை: நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில அளவிலான பேச்சாளர்கள் தேர்வு இன்று கட்சித் தலைவர் சரத்குமார் முன்னிலையில் நடந்தது.
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் இந்த பேச்சாளர் தேர்வு நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்களில் சிறப்பாக பேசியவர்களை சரத்குமார் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர்களாக தேர்வு செய்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சாளர்களுக்கு ஒரு மாதத்திற்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் கட்சியின் கொள்கைகள் குறித்து கிராமம் கிராமமாக அவர்கள் பிரசாரம் செய்து பேசுவார்கள்.
Comments
Story first published: Sunday, March 2, 2008, 15:02 [IST]