கண்ணிவெடித் தாக்குதலில் யாழ்ப்பாணம் தமிழ் எம்.பி. பலி
தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இந்த எம்.பி, யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி. ஆவார்.
இந்த சம்பவம் குறித்து இன்னொரு எம்.பியான மாவை சேனாதி ராஜா கூறுகையில், யாழ்ப்பாணம் எம்.பி. சிவநேசன், கொழும்பிலிருந்து கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
இன்று பிற்பகல் 1.15 மணிக்கு அவரது கார் வந்தபோது, கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியது. இதில் சிவநாதனும், அவரது கார் டிரைவரும் பலியானார்கள் என்றார்.
இந்த ஆண்டில் உயிரிழந்துள்ள 3வது தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவநேசன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2வது தமிழ் எம்.பியும் ஆவார்.
சேனாதிராஜா தொடர்ந்து கூறுகையில், மாங்குளம் பகுதியில் இந்த சம்பவம் நட்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசுப் படைகளே காரணம் என்றார்.
ஆனால் இந்த சம்பவத்திற்கும், அரசுப் படைகளுக்கும் தொடர்பு இல்லை என்று ராணுவம் மறுத்துள்ளது. விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ராணுவ நடமாட்டமே கிடையாது என்று அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.