For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியை கொன்ற கணவன் கைது

By Staff
Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: மலை உச்சிக்கு அழைத்து சென்று மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நடராஜபுரம் தெருவை சேர்ந்தவர் கண்ணன். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களாகிறது.

கவிதா திரூவாரூர் மாவட்டத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வரதட்சனை பிரச்னை தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கண்ணனின் குடும்பத்தினர் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் மலையில் உள்ள காரி சாத்தான் மலையப்பசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். கண்ணனும் கவிதாவும் சென்றனர்

உறவினர்கள் அனைவரும் கோவிலில் நிழச்சியை முடித்து விட்டு கீழே இறங்கினார்கள். நீங்கள் முதலில் போங்கள் நானும் கவிதாவும் பிறகு வருகிறோம் என்று கூறினார். அவர்களும் சென்றுவிட்டனர். கவிதாவை அழைத்துக் கொண்டு கண்ணன் மலை உச்சிக்கு சென்றார். அங்கு கவிதாவின் தலையில் கல்லை போட்டார். கவிதா அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

அழுதவாறு மலை அடிவாரத்திற்கு ஓடிவந்த கண்ணன், மனைவி கவிதா மலைஉச்சியில் நின்றிருந்தபோது தவறி விழுந்து இறந்துவிட்டாள் என்று கதறினார். இதை நம்பிய அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கரிவலம்வந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து சென்று விசாரனை நடத்தினர். அப்போது கவிதாவின் உடலில் தலையில் மட்டும் காயம் இருந்தது. வேறு எந்த இடத்திலும் காயம் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கவிதாவின் கணவர் கண்ணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது மனைவியை கொலை செய்ததை கண்ணன் ஓப்புக் கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X