வேகம் பிடிக்கும் திருச்சி சாப்ட்வேர் பார்க் பணி-49 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு
திருச்சி: திருச்சியில் சாப்ட்வேர் பார்க் அமைக்க 49.89 ஹெக்டேர் நிலத்தை மத்திய அரசு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் இந்த நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சியை ஒட்டிய நாவல்பட்டு புறநகர்ப் பகுதியி்ல் இந்த நிலம் அமைந்துள்ளது.
இங்கு சாப்ட்வேர் மற்றும், சாப்ட்வேர் தொடர்பான நிறுவனங்கள் அமையும்.
எச்சிஎல், சூதர்லாண்ட், ஐபிஎம், இன்போசிஸ், டிசிஎஸ் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவதால் கூடுதலாக 120 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
90 வருட குத்தகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 15 லட்சம் வீதம் இங்கு தனியாரிடம் இருந்து நிலம் வாங்கப்படவுள்ளது.
திருச்சியின் மையப் பகுதியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் மொத்தம் 500 ஏக்கரில் சாப்ட்வேர் பார்க்கை அமைக்க திட்டமிட்டுள்ளது.
திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டானிலும் சாப்ட்வேர் பார்க் அமைக்கும் பணிகள் வேகம் பிடித்துள்ளன.