2 இலங்கை தமிழ் அகதிகள் ராமேஸ்வரம் வருகை
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து இரண்டு இளைஞர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் கடுமையாகி வருகிறது. இதனால் தினசரி அகதிகள் வருவது வழக்கமாகியுள்ளது.
நேற்று கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அகதிகளாக வந்தனர். படகு ஒன்றில் இவர்கள் வந்து சேர்ந்தனர்.
உரிய விசாரணைக்குப் பின்னர் இவர்களை போலீஸார் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
கரை ஒதுங்கிய உடல் - கடற்புலியா?
இதற்கிடையே, தங்கச்சி மடம் அருகே மாந்தோப்பு என்ற இடத்தில் கடலில் மிதந்து வந்த ஒரு உடல் கரை ஒதுங்கியது. மிகவும் அழுகிய நிலையில் அந்த உடல் காணப்பட்டது.
அது ஒரு இளைஞரின் உடல். முழு நிர்வாணமாக உடல் இருந்தது.
அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்தது.
அந்த நபர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடல் பிரிவான கடற்புலிகள் பிரிவைச் ேசர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் இதேபோல 3 உடல்கள் மிதந்து வந்தன. அப்போது கடற்புலிகளுக்கும், கடற்படைக்கும் இடையே கடும் சண்டை நடந்தது நினைவிருக்கலாம்.