For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசின் புதிய மின் வினியோக கழகம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தில் மின் வினியோகத்தை சீர்படுத்த மின் வினியோக கழகம் என்ற அமைப்பை அரசு உருவாக்கவுள்ளது.

தென் மாவட்டங்களின் வளர்ச்சி குறித்த கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையி்ல்,

தமிழகத்தில் மின் விநியோகத்தை சீர் செய்யவும், நஷ்டத்தை குறைக்கவும் மின் விநியோக கழகம் துவங்கப்பட உள்ளது.
இது மி்ன்துறையை தனியார் மயமாக்கும் முயற்சி அல்ல.

தொழில்துறைக்கான மின்சாரம், மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைந்த கட்டணத்தில் தமிழகத்தில் தான் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தினமும் 6 மணி நேரமும், அருகில் உள்ள மாநிலமான கர்நாடகாவில் 10 மணி நேரமும் மின் தடை உள்ளது. ஆனால் தமிழகத்தில் அந்த நிலை இல்லை.

கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் அமையும் அணு மின் நிலைய மின் உற்பத்தி 1,000 மெகாவாட் அதிகப்படுத்தப்பட உள்ளது. இதை 6,000 மெகாவாட்டாக உயர்த்த ரஷ்யா அனுமதி கோரியுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X