மீண்டும் ஏர்போர்ட் ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை: விமான நிலைய ஊழியர்கள் இன்று இரவு முதல் நாளை இரவு வரை வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர்.
தனியாரிடம் விமான நிலையங்களை ஒப்படைக்கக் கூடாது, ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களை மூடக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் விமான நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக் செய்தனர். ஆனால் இந்த ஸ்டிரைக்கால் விமான போக்குவரத்து சேவையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் 2 நாட்களில் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரவு மீண்டும் ஸ்டிரைக் செய்ய விமான நிலைய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். ஊதியத்ைத உயர்த்தித் தர வேண்டும். தனியாரிடம் விமான நிலையங்களை ஒப்படைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் 108 விமான நிலையங்களில் பணியாற்றும் 17 ஆயிரம் ஊழியர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.