For Daily Alerts
Just In
பைக்குகள் மோதல்-எம்பிஏ மாணவர் உட்பட 2 பேர் பலி
மார்த்தாண்டம்: இரு பைக்குகள் மோதிக் கொண்டதி்ல் எம்பிஏ மாணவர் உள்பட இருவர் பலியாயினர்.
குழித்துறையைச் சேர்ந்த எம்.பி.ஏ மாணவர் மணிகண்டன். இவர் தனது நண்பர் ஜான் தேவராஜுடன் இரவு பைக்கில் குழித்துறையில் இருந்து கலுவன்திட்டு சென்றனர்.
நரியன்விளை என்ற இடத்தில் எதிரே வந்த மற்றொரு பைக்குடன் இவர்களது பைக் மோதியது. இதில் மணிகண்டன், ஜான் வேதராஜ், எட்வின்ராஜ், வருண் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.
மார்த்தாண்டத்தில் தனியார் முரத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்களில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன், ஜான் வேதராஜ் ஆகியோர் இறந்தனர்.
எட்வின்ராஜ், வருண் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து களியாக்கவிளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Monday, March 17, 2008, 10:40 [IST]