தமிழகத்தில் மழை தொடரும்
சென்னை: தமிழகம் முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்யும் என சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
இன்றும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.
இந்த தொடர் மழை காரணமாக அணைகள், ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழக்கும் புழல், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
ஆனால், எதிர்பாராத இந்த மழையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இந்த மழையால் பயிர்கள் நாசமடைந்து வருகின்றன.
இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கும் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.