For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநர் பர்னாலாவுக்கு நெஞ்சு வலி-மருத்துவமனையில் அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று பகல் 12 மணியளவில் பர்னாலாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட பர்னாலாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்ைச அளித்தனர். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து பர்னாலாவுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தேறி வருவதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும், புதன்கிழமை அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சட்டர்ஜிக்கும் நெஞ்சு வலி:

இந் நிலையில் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜிக்கும் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு, டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால் கடந்த இரு தினங்களாக அவர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X