For Daily Alerts
Just In
பாகிஸ்தானின் முதல் பெண் சபாநாயகராக பாமிதா மிர்சா தேர்வு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முதல் பெண் சபாநாயகராக பாமிதா மிர்சா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கு இரண்டு பேர் மனு தாக்கல் செய்தனர்.
அதில் பாமிதா மிஸ்ராவும் (51) ஒருவர். இவர் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் ஆவார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கு இன்று ரகசிய ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதன் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டன.
இதில் பாமிதா மிர்சா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானின் முதல் பெண் சபாநாயகர் பாமிதா மிர்சா என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, March 19, 2008, 21:12 [IST]