நக்சலைட் தப்ப முயற்சி - சிறைக்குப் பாதுகாப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நக்சலைட் தலைவர் மாதுவுக்கு பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தேனி மாவட்ட வனப் பகுதியில் நக்சலைட் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது முக்கிய நக்சலைட் தலைவரான மாது சிக்கினார். அவரை தற்போது புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் மாது தப்பிக்க திட்டமிட்டிருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து சிறைப் பாதுகாப்பை அதிகரிக்குமாறு போலீஸ் தரப்பில் சிறை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை கிளைச் சிறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மது அடைக்கப்பட்டுள்ள சிறை அறை பகுதியிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.