திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்
திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா தொடங்கியது. 21ம் தேதி பங்குனி உத்திரமும் மறுநாள் சூரசம்ஹாரமும், நேற்று பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி காலை 10 மணி அளவில் கோவிலில் உள்ள உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான், தெய்வானைக்கு அணிகலன்கள் அணிவிக்கப்பட்டன.
புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டு சர்வ அலங்கார தீபாராதனை நடந்தது.
இதைத் தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து முருகப்பெருமான், தெய்வானையுடன் வீதி உலா வந்து சந்திப்பு மண்டக பத்தில் எழுந்தருளினார்.
அதே நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் புறப்பட்டு திருப்பரங்குன்றம் வந்தனர்.
பின்னர் திருவாட்சி மண்டபத்தில் மேள தாளங்கள் முழங்க முருகப்பெருமான் தெய்வானையின் திருக்கல்யாணம் நடந்தது.
நாளை தேரோட்டம் நடக்கவுள்ளது.