For Daily Alerts
Just In
மழையால் நின்ற ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்
ஊட்டி: கடும் மழையால் நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் நீலகிரியில் உள்ள சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் குன்னூர்-பார்லியார் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் மக்கள் கடும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையிலும் கடந்த 23ம் தேதி முதல் 4 நாட்களுக்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. குன்னூர்-ஊட்டி வரையிலான ரயில் போக்குவரத்து வழக்கம் போல் தொடர்ந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதல் மழை குறைந்தால் மலை ரயில் இன்று முதல் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரி ரவீந்திரன் அறிவித்துள்ளார்.
Story first published: Wednesday, March 26, 2008, 12:16 [IST]