For Daily Alerts
Just In
ம.பி: கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி
அசோக் நகர் (ம.பி): மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் நடந்த கோவில் கூட்ட நெரிசலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
அசோக் நகக் மாவட்டம் கரீலா என்ற இடத்தில் உள்ள சீதா கோவில் மைதானத்தில், ரங்க பஞ்சமி விழா நடந்தது. இதையொட்டி பெருமளவிலான பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கினர்.
இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Story first published: Thursday, March 27, 2008, 10:35 [IST]