துர்கை உருவத்தில் போஸ்டர்-சோனியா மீது வழக்கு
முசாபர்பூர்: துர்கை உருவத்தில் சோனியாவை சித்தரித்து போஸ்டர் வெளியிடப்பட்டது தொடர்பாக, இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக சோனியா காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உ.பி. மாநிலம் மொராதாபாத் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை துர்கை உருவத்தில் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்தப்படம், அப்போதே தொலைக்காட்சிகளில் படம் பிடித்து ஒளிபரப்பப்பட்டது. பத்திரிகைகளும் வெளியிட்டன.
அந்த போஸ்டரை மொராதாபாத் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும் இணைந்து தயாரித்துள்ளனர். அவர்களுடன் இணைந்து சோனியா காந்தியும் குற்றச்சதியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த போஸ்டரால் இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளது. எனவே சோனியா உள்ளிட்ட மூவர் மீதும் ஐபிசி 295, 295(ஏ),120(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு, மாவட்ட நீதிபதி எச்.கே.ஸ்ரீவஸ்தவா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற அவர் விரைவு நீதிமன்றத்திற்கு அதை அனுபப்ினார். அடுத்த மாதம் இந்த மனு அங்கு விசாரணைக்கு வருகிறது.