கம்யூனிஸ்ட்கள் நாட்டின் எதிரிகள்-ராம. கோபாலன்
கேரளா மாநிலத்தில் இந்து அமைப்பினர், மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தாக்கப்படுவதை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ராம. கோபாலன்,
கம்யூனிஸ்ட்கள் சீனா, ரஷ்யாவைத் தான் மிகவும் நேசிக்கின்றனர். பிறந்த மண்ணையும், நாட்டை நேசிப்பதில்லை. அதனால் தான் சொல்கிறோம் அவர்கள் நமது நாட்டின் எதிரிகள்.
கம்யூனிஸ்ட்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களுக்கும் நமக்கும் உள்ள மோதல் என்பதை இரு கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள மோதலாகத்தான் பார்க்க வேண்டும்.
நாம் வீடு வீடாக சென்று அவர்களது வேஷங்களை பற்றி மக்களிடம் எடுத்துக்கூறி தேர்தலின் போது அவர்களை தோற்கடிக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
இந் நிலையி்ல் இந்து முன்னணி கூட்டம் நடந்த அதே இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பதில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.