For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி to கோலாலம்பூர்-துபாய்க்கு ஏர் இந்தியா!

By Staff
Google Oneindia Tamil News

Air India
திருச்சி: திருச்சியிலிருந்து துபாய், கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவை விரைவில் தொடங்கவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் முதலாமாண்டு விழா திருச்சியில் நடந்தது. இதில் திருச்சி விமான நிலைய மேலாளர் நடராஜன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், திருச்சியில் இருந்து துபாய், கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவை வழங்கும் திட்டம் விரைவில் வழங்க உள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.

சென்னை விமான நிலையம் நிரம்பி வழிகிறது. புதிதாக விமான சேவையை அறிமுகப்படுத்த முடியாத அளவுக்கு அங்கு நெருக்கடி நிலவுகிறது. எனவே திருச்சி விமான நிலையத்திலிருந்து மேலும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார்.

ஏர் இந்தியாவின் விமான நிலைய மேலாளர் நாராயணன் பேசுகையில், ஏர் இந்தியா நிறுவனம் சிங்கப்பூருக்கு வாரம் 9 சர்வீஸ்களும், துபாய்க்கு 3 சர்வீஸ்களும் என மொத்தம் 12 விமான சேவைகளை வழங்கி வருகிறது.

துபாய்க்கான சேவை 6ஆக விரைவில் உயர்த்தப்படும். சிங்கப்பூர் மற்றும் துபாய் விமானங்களில் 75 சதவீத இருக்கைகள் நிரம்பிவிடுகின்றன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X