For Daily Alerts
Just In
அழுகிய வத்தலுடன் 'அழுகை போராட்டம்'!!
தூத்துக்குடி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அழுகிய வத்தலுடன் அழுது கொண்டே நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
விளாத்திகுளம் அருகேயுள்ள வி.வேடப்பட்டியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மிளகாய் சாகுபடி நடந்து வருகிறது. இதில் பயிரான மிளகாய் பழங்களை விவசாயிகள் வைப்பாற்று மணல் பரப்பில் காய வைத்தனர். ஆனால் அவை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் மிளகாய் செடிகளுக்குள் நீர் தேங்கியதால் மிளகாய் பழங்கள் அழுகி மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் வேடப்பட்டி பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர் சுமதி தலைமையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அழுகிய மிளகாய் பழங்களை பரப்பி வைத்தனர்.
பின்னர் பெண்கள் மட்டும் அதனை சுற்றி அமர்ந்து கண்ணீரும், கம்பலையுமாக ஓப்பாரி வைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments
Story first published: Tuesday, April 1, 2008, 13:39 [IST]