காஞ்சி கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நேற்று இரவு உண்டியல் உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கச்சபேஸ்வரர் கோயில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோயில் இருந்த சில்வர் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து குருக்கள், கோயில் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து கோயில் நிர்வாகம் காஞ்சி போலீசில் புகார் அளித்தது. இதன்பேரில் காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோயில் சுற்றுச்சுவரை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
கொள்ளைபோன பொருள்களின் மதிப்பு தெரியவில்லை. அங்கிருந்த மற்றொரு இரும்பு உண்டியலையும் உடைக்க முயற்சி நடந்துள்ளது. ஆனால் அதை உடைக்க முடியாததால் விட்டு சென்றுவிட்டனர்.
சில்வர் உண்டியலில் ஏராளமான நகைகள், ரொக்கம் இருந்திருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.