For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி அறிவிப்பு எதிரொலி-கர்நாடக பந்த் கைவிடப்பட்டது

By Staff
Google Oneindia Tamil News

Vidhana Souda - Bangalore
பெங்களூர்: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து வருகிற 10ம் தேதி நடத்துவதாக இருந்த கர்நாடக பந்த் போராட்டத்தை, கன்னட ரக்ஷன வேதிகே திரும்பப் பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் நாராயண கெளட செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசு ஓகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. எனவே எங்களது பந்த் போராட்டத்தையும் நாங்கள் தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்.

மேலும் மாநிலம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்.

இருப்பினும் ஓகேனக்கல் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடர முயன்றால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.

கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி வந்த பிறகும் கூட இந்தத் திட்டத்தை தொடர விடக் கூடாது. தொடரவும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X