ஒலிம்பிக் தொடக்க விழாவில் புஷ் பங்கேற்பு
வாஷிங்டன்: சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கட்டாயம் கலந்து கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்துள்ளார்.
திபெத்தில் அடக்குமுறையை கையாளும் சீனாவை கண்டித்து ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவை புறக்கணித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவும் புறக்கணிக்க வேண்டும், தொடக்கவிழாவில் அதிபர் புஷ் கலந்து கொள்ளக் கூடாது என்று முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி உள்ளிட்ட ஜனநாயக கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை புஷ் நிராகரித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டோனி பிரட்டோ கூறியதாவது:
சீனாவில் மனித உரிமைகளை கண்டிக்க ஒருபோதும் அதிபர் புஷ் தவறியதில்லை.
திபெத் பிரச்னையில் அமெரிக்க நிலைப்பாடு தெள்ளத் தெளிவானது. அதற்காக தொடக்க விழாவை புறக்கணிக்கத் தேவையில்லை. கட்டாயம் புஷ் கலந்து கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.