For Quick Alerts
For Daily Alerts
Just In
குழந்தை உள்பட 4 இலங்கை அகதிகள் தனுஷ்கோடிக்கு வருகை
ராமேஸ்வரம்: இலங்கையைச் சேர்ந்த 4 பேர் நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர். அதிகாரிகள் அவர்களை விசாரித்து மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதையடுத்து தமிழகத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் தனுஷ்கோடிக்கு நேற்று வந்தனர்.
கிளிநொச்சியில் இருந்து கள்ளத் தோணியில் ரூ.40 ஆயிரம் கொடுத்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
தமிழக உளவுத் துறையினரும், வருவாய் அதிகாரிகளும் அவர்களிடம் விசாரணை செய்தனர். பின்னர் மண்டபத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
Comments
Story first published: Thursday, April 10, 2008, 9:53 [IST]