For Quick Alerts
For Daily Alerts
Just In
நெல்லை விநாயகர் மீது சூரிய கதிர்கள் விழும் அதிசயம்!
நெல்லை: நெல்லையில் அமைந்துள்ள விநாயகர் கோவில் விக்கிரகம் மீது சித்திரை முதல் நாள் சூரிய ஒளி விழும் அதிசயம் நடந்து வருகிறது.
நெல்லை சந்திப்பு வடக்கு பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள உச்சிஷ்ட விநாயகர் கோவில் ஆசியாவிலேயே பெரிய ராஜகோபுரம் கொண்ட ஒரே விநாயகர் கோவில் என்ற சிறப்பு வாய்ந்தது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் விநாயகர் அம்பாளுடன் காட்சி தருகிறார்.
சித்திரை மாதத்தில் முதல் மூன்று நாட்கள் சூரிய கதிர்கள் விநாயகர் மீது விழும் வண்ணம் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது. இதன் முலம் சூரிய பகவான் விநாயகரை நேரடியாக தரிசனம் செய்வதாக ஐதீகம்.
சித்திரை மாத பிறப்பான இன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை சூரிய கதிர்கள் விநாயகர் மீது விழுவதை பார்க்கலாம்.
Comments
Story first published: Sunday, April 13, 2008, 10:41 [IST]