For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கறிக்காக மான்வேட்டை: 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மான்வேட்டையாடிய 4 பேரை பிடித்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் காட்டுப்பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து அந்தப் பகுதியில் விசாரணை நடத்திவந்தனர்.

இதில், சங்கராபுரம் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் (25), ஜான் போஸ்கோ 32, தனஅராஜ் 32, அம்புரோஸ் 35 ஆகிய 4 பேரும் மானை வேட்டையாடி அதன் கறியை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், போஸ்கோ அடிக்கடி மான் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிந்ததால் அவருக்கு ரூ.50000 அபராதமும், மற்ற 3 பேருக்கு தலா ரூ.20000 அபராதமும் விதிக்கப்பட்டது.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X