ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்-சச்சின் விலகல்
திபெத்தியர்கள் எதிர்ப்பு ஒருபுறம் இருக்க இந்தியாவில் நாளை ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடக்கவுள்ளது.
இந்தியாவில் ஒலிம்பிக் ஜோதியை கால்பந்து அணியின் கேப்டன் பூட்டியா ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திபெத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சுடர் ஓட்டத்த்தில் இருந்து பூட்டியா விலகிக் கொண்டதால் முதல் பரபரப்பு எழுந்தது.
அடுத்ததாக கிரண் பேடியும் இந்த ஓட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகை சோகா அலிகான் தானும் விலகுவதாக அறிவித்தார்.
இந் நிலையில் சுடர் ஓட்டத்தில் இருந்து சச்சின் டெண்டுல்கரும் விலகிக் கொண்டுள்ளார். காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி 2 டெஸ்டுகளிலும் அவர் விளையாடவில்லை.
ஓய்வெடுத்து வந்தபோதிலும் பெருமைக்குரிய ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் கலந்து கொள்வதாக சச்சின் உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் நாளைய ஜோதி ஓட்டத்தி்ல் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.
சச்சின் கலந்து கொள்ளாதது பற்றி இதுவரை எந்த தகவலும் தனக்கு வரவில்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார்.