For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரியங்கா மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு சு.சுவாமி 'கெடு'

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறைக்குள் முன் அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்த பிரியங்கா மீது தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கேஸ் போடுவேன் என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிக பாதுகாப்பு நிறைந்த வேலூர் சிறைசாலைக்குள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நளினியை பிரியங்காகாந்தி எந்த விதமான அனுமதியும் இன்றி சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பை சிறைத்துறை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறைக்குள் முன் அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்த பிரியங்கா மீது தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மே 21ம் தேதிக்குள் இது சம்பந்தமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் சட்டப்படி கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார் சுவாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X