தென்னக முதல்வர்கள் கூட்டம்: பிரதமருக்கு ராமதாஸ் கோரிக்கை
டெல்லி: நதி நீர்ப் பிரச்சினை தொடர்பாக தென் மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டுவதாக தன்னிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
டெல்லி வந்துள்ள டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை நான் சந்தித்துப் பேசியபோது, நதி நீர்ப் பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு, ஐந்து தென் மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டி பிரச்சினைகளுக்கு சுமூக முடிவைக் காண வேண்டும் என வலியுறுத்தினேன்.
எனது யோசனையை அவர் ஏற்றுக் கொண்டார். இதுகுறித்துப் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்.எம்.கிருஷ்ணா தொடர்ந்து தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். அவரை தமிழக அரசு நம்பக் கூடாது. இந்தப் பிரச்சினையில் அவர் தமிழகத்திற்கு எதிரான நிலையில்தான் உள்ளார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் சோரியாஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற அரசு உறுதியாக செயல்பட வேண்டும். இதைத் தீர்க்க நடவடிக்ைக எடுக்காவிட்டால், கடுமையான போராட்டங்களையும், பின் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
இது மாநில விவகாரம். எனவ ஓகனேக்கல் தொடர்பாக பிரதமரை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றார் ராமதாஸ்.