For Daily Alerts
Just In
நாளை மறுதினம் அத்வானி நாகர்கோவில் வருகை
நாகர்கோவில்: பாஜக தலைவர் அத்வானி நாளை மறு தினம் நாகர்கோவில் வருகிறார். அங்கு நடக்கும் அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
தமிழக பாஜக சார்பில் கடந்த பல வாரங்களாக தாமரை யாத்திரை நடத்தப்பட்டது. இந்த யாத்திரையின் நிறைவு நாளையொட்டி நாளை மறுதினம் நாகர்கோவிலில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் அத்வானி வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வரும் அத்வானி, அங்கிருந்து கார் மூலம் சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.
அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தப் பின் பொதுக் கூட்டத்தில் பேசுவார்.
மறுநாள் காலை ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி திரும்புவார். அத்வானி வருகையை முன்னிட்டு நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, April 24, 2008, 12:45 [IST]