For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திண்டுக்கல்லில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்ட குழந்தை பலி

By Staff
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அங்கன்வாடியில் மஞ்சள்காமாலை தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்தது.

சமீபத்தில் திருவள்ளூரில் நான்கு பச்சிளம் குழந்தைதகள் தடுப்பூசி போட்டு உயிரிழந்தனர். தர்மபுரியிலும் தடுப்பூசிக்கு பலி ஏற்பட்டது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் மஞ்சள் காமாலைக்கு தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.

திண்டுக்கல் குரும்பட்டி அருகே உள்ள பெரியார் காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு 11 மாதங்களுக்கு முன்பு மாரியம்மாள் என்ற பெண் குழந்தை பிறந்தது.

பெரியார் காலனி அங்கன்வாடியில் கடந்த 23ம்தேதி தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. அப்போது மாரியம்மாளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அதன் பின்னர் கடந்த இரண்டு நாள்களாக குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் அடித்துள்ளது. இதையடுத்து குழந்தையை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை மாரியம்மாள் பரிதாபமாக இறந்தது.

தடுப்பூசி போட்டதைத் தொடர்ந்து குழந்தை இறந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X