வங்கக் தாழ்வு நிலை-கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இது குறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையில் இருந்து கிழக்கு-தென் கிழக்கு திசையில் 700 கி.மீக்கு அப்பால், வங்கக் கடலில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது நேற்று இரவு மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
தற்போது சென்னையில் இருந்து 600 கி.மீ. தொலைவில் கடலில் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் நகர்ந்து வரும் பட்சத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை உள்பட வட தமிழ்நாட்டிலும், புதுவை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் வலுப்பெற்றால் புயல் சின்னமாக மாறும். அப்படி மாறும் பட்சத்தில் இதற்கு நர்கீஸ் என பெயர் சூட்டப்படவுள்ளது.
இந்த தாழ்வு நிலையால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.