For Daily Alerts
Just In
ஜிப்மர் மருத்துவமனை தன்னாட்சி மசோதா நிறைவேற்றம்
டெல்லி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையமாக அறிவிக்கும் மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி மக்களவையில் தாக்கல் செய்தார்.
பாஜக உறுப்பினர் கிரேன் ரஜிஜூ, ஜப்மர் மருத்துவமனைக்கு உண்மையான தன்னாட்சி வழங்க வேண்டும், அந்த மருத்துவமனைக்கான ஆண்டு பட்ஜெட் ரூ.56 கோடியில் இருந்து உயர்த்த வேண்டும் என்றார்.
ஜிப்மர் நிர்வாக கவுன்சிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு எம்பியை நியமிக்க வேண்டும் என்று திமுக எம்பி கிருஷ்ணசாமி கோரினார்.
விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் கடந்த 23ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, April 30, 2008, 15:29 [IST]