For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாபில் 5 இலங்கைப் பெண்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

அமிர்தசரஸ்: போலி விசா மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 5 பெண்கள் பஞ்சாபில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையை சேர்ந்த டயானா, நிஷானி, வர்னகுல சூர்யா, திலினி மற்றும் சமந்தி ஆகியோர் கடந்த மார்ச் மாதம் பெங்களூர் வந்தனர். அங்கிருந்து டெல்லி சென்ற அவர்கள் நேற்று அமிர்தசரஸ் சென்றனர்.

பின்னர் நேற்று மாலை அனைவரும் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இத்தாலி செல்ல முயற்சித்தனர்.

அப்போது அவர்களது பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது போலி விசாக்களுடன் அவர்கள் பயணிக்க முயன்றது தெரிய வந்தது.

பிழைப்புக்காக இத்தாலி செல்ல முயன்றதாக விசாரணையில் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X