கர்நாடகம்: திமுகவினர் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்-கருணாநிதி
சென்னை: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திமுகவினர் வாக்களிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் 10, 16 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு 10ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந் நிலையில் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு திமுகவினர் வாக்களிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அங்குள்ள திமுகவினரின் ஆதரவை கோரி அம்மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அதன் அடிப்படையில் கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள் அனைவரும் முழு அளவில் ஒத்துழைத்து கழக வாக்குகள் சிதறாமல் காங்கிரஸ் வேட்பாளர்களின் கை சின்னத்தில் அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.