600 சிமென்ட் மூட்டைகளுடன் லாரி திருட்டு
கரூர்: கரூர் அருகே 600 மூட்டை சிமென்ட் மூட்டைகளுடன் லாரி காணாமல்போனது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், சக்கரைக்கோட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், லாரி டிரைவர். இவர் புலியூர் சிமென்ட் ஆலையில் இருந்து 600 மூட்டை சிமென்ட் மூட்டை லோடு ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த ஒருவர் உங்கள் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. உடனே வரும்படி கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், லாரியை புலியூர் செட்டிநாடு சிமென்ட் பேக்டரி அருகில் நிறுத்தி விட்டு மனைவியை பார்க்க வீட்டிற்கு புறப்பட்டார். லாரியை பார்த்துக் கொள்ளும்படி அருகில் உள்ள லாரி புரோக்கர்களிடம் கூறிவிட்டு சென்றார்.
பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். லாரி காணாமல்போனது தெரியவந்தது.
இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசில் ராஜ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிமென்ட் மூட்டைகளுடன் காணமல் போன லாரியை தேடி வருகின்றனர்.