கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை இயக்கம் 11ம் தேதி துவக்கம்
நெல்லை: நெல்லையில் ஆர்.சி.சி.எஸ்.ஐ. லுத்தரன் சபை மக்கள் இணைந்து துவக்கும் கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க துவக்க விழா வரும் 11ம் தேதி நடக்கிறது.
இது குறித்து பாளை மறை மாவட்ட ஆர்சி பிஷப் ஜீடு பால்ராஜ் கூறியதாவது,
அன்பு, நீதி, சமத்துவம், சகோரத்துவம், மனிதநேயத்தில் வேர்கொண்டது கிறிஸ்தவம். கிறிஸ்தவர்கள் பிறருக்கு தொண்டு செய்வதை முதற்கடமையாக வைத்துள்ளனர். எனினும் கிறிஸ்தவர்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் அடிப்படையில் புறக்கணிப்பு, பாகுபாடு, அநீதிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்களின் வாழ்வுரிமை கேள்விகுறியாக உள்ளது.
எனவே எங்களுக்குகாக ஒரு இயக்கம் தேவைப்படுகிறது. கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க பாடுபடவும், சலுகைகளை கிறிஸ்தவர்களுக்கு பெற்று தரவும் கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கம் துவக்கப்படுகிறது. இது அரசியல் இயக்கம் அல்ல. மதவாத இயக்கமும் அல்ல.
மதசார்ப்பற்ற அரசியலை வளர்க்கவும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தவும் இந்த இயக்கம் பாடுபடும். தமிழகத்தில் 17 இடங்களில் கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை இயக்கம் வரும் 11ம் தேதி துவக்கப்படுகிறது என்றார்.