For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகாசி பூஜை: சபரிமலையில் இன்று நடைதிறப்பு

By Staff
Google Oneindia Tamil News

Sabarimala Ayyappan
பம்பை: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (மே 14ம் தேதி) நடை திறக்கப்படுகிறது. வரும் 19ம் தேதிவரை கோயில் நடைதிறந்திருக்கும்.

வைகாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5.30 மணியளவில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி டி.கே.கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துகிறார். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

15ம் தேதி அதிகாலை முதல் 19ம் தேதி இரவு வரை ஐயப்பனுக்கு தினமும் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்சிகால பூஜை, இரவு பூஜை ஆகிய வழக்கமான பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் காலையில் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகமும் நடைபெறும்.

19ம் தேதி இரவுடன் வைகாசி மாத பூஜைகள் நிறைவடையும். அன்று இரவு 10.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக ஜூன் 11ம் தேதி நடை திறக்கப்படும். மறுநாள் 12 ம் தேதி அன்று பிரதிஷ்டை தின பூஜைகள் நடைபெறும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X