For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 19 மீனவர்கள் மாயம்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 19 மீனவர்கள் மீண்டும் கரை திரும்பவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த 5ம் தேதி 4 நாட்டுப் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

ஒரு வாரமாகியும் அவர்கள் கரை திரும்பாததால் அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை ராணுவத்தினர் அவர்களை பிடித்தி சென்றனரா அல்லது வழி தெரியாமல் வேறு எங்காவது சென்றுவிட்டனரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸ் மற்றும் மீன் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X